Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இலவசம்….. வாவ் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.49 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தை இந்தியா முழுவதும் 5 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் ரூ.38 டாக் டைம், 100 எம்பி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |