Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்…. சிறார் தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்…. அரசு வெளியீடு….!!!!

நாடு முழுவதும் இன்று முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இருபத்தி எட்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாக செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 21.21 லட்சம் சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனைப் போலவே 60 வயதை கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது.

இந்நிலையில் சீரார் தடுப்பூசி காண வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருபத்தி எட்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகள் செலுத்திக் கொள்ள வேண்டும். 12 வயது முடிந்ததை தடுப்பூசி செலுத்துபவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். 12 வயதை எட்டவில்லை எனில் தடுப்பூசி போடக்கூடாது. 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர் சிறுமியருக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும். ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |