பூந்தமல்லி நகராட்சியில் குட்டை முழுவதும் நிரம்பி கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு எம்ஜிஆர் நகர் குட்டையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி உள்ளதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு இருக்கும் மழைநீரை நகராட்சி அதிகாரிகள் பெரிய அளவிலான மோட்டார்களை வைத்து தேங்கியுள்ள மழை நீரை மற்றொரு பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் அந்த மழைநீர் குமணன்சாவடியில் உள்ள குட்டையில் வந்து விழுவதால் அந்த குட்டை முழுவதும் நிரம்பி கழிவுநீர் அதிகளவு வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் அந்த பகுதி முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.