உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து நான்காவது வாரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் போன்றோர் இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் நாட்டின் கொடியையும் ஒன்றாக ஏற்றியுள்ளனர்.
மேலும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நியூயார்க்கில் உக்ரைன் நாட்டின் கொடி ஏற்றப்பட்டிருப்பதாகவும், போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அங்கு இந்த கொடி பறக்கும் என்றும் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.