பிரபல இயக்குனர் தனக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இந்த படத்திற்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மாமனிதன் படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜாவுக்கும், சீனு ராமசாமிக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது.
இந்த தகவலில் உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில் எனக்கும் யுவனுக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. எங்களுக்குள் பிரச்சனை இருப்பதாக வந்த தகவல்கள் முற்றிலும் வதந்தி. இது மாதிரி தகவல்கள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை. எங்களுக்குள் பல வருட பழக்கம் இருக்கிறது. மாமனிதன் படம் தாமதமானதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.