Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாகையில் இருந்து ஈரோட்டுக்கு….. ரயிலில் வந்த 1000 டன் நெல்….!!!

தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக பல்வேறு இடங்களில் இருந்து நெல் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது.

அதன்படி நாகையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் நெல் மூட்டைகள் 20 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தது. மேலும் இந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் நேற்று லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |