Categories
தேசிய செய்திகள்

“நவீன ட்ரோன் விமானங்கள்” சீட்டா திட்டத்தின் கீழ் முப்படைக்கு தயாரிப்பு…. வெளியான முக்கிய தகவல்.‌…!!!!

இந்திய விமானப்படையின் சீட்டா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பாதுகாப்பு துறை ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவின் முப்படைக்கு ட்ரோன்களை ஆயுதமாக தயாரித்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஹெரான் ட்ரோன்கள் மேம்படுத்தப்படும். இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹெரான் ட்ரோன்கள் நடுத்தர உயரத்தில் இருக்கும் ஆளில்லா விமானம் ஆகும். இவை 250 கிலோ வரை எடையை சுமந்து செல்லும்.

இதில் ரேடார்கள், கேமராக்கள் போன்ற போன்ற பல கருவிகளை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஹெரான் ட்ரோன் விமானத்தின் தகவல் தொடர்பு தொலைந்தாலும் தானாகவே தளத்திற்கு திரும்பி விடும். இந்த ட்ரோன் விமானத்தை இந்திய விமானப்படை, கப்பற்படை மற்றும் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளிலும் பயன்படுத்து வதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் லேசர் வழிகாட்டும் குண்டுகளுடன் ஆயுதம் ஏந்துவதற்கு ஏற்றவாறு ட்ரோன் வடிவமைக்கப்படும்.

Categories

Tech |