உலக நாடுகள் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதில் ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை(நவம்பர் 22) முதல் நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஆஸ்திரேலியா அதிபர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு குறைந்தது 10 நாட்கள் அமலில் இருக்குமென்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பத்து நாட்கள் அமல்படுத்தப்பட முழு ஊரடங்கின் பயனை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு படுவது குறித்து அரசு முடிவு செய்யும்.