தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், ஒரு மாதத்துக்கு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற உள்ளது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான படிவங்களை வழங்கலாம். தொடர்புடைய வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 5- இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், வாக்காளர் உதவி செயலி (VOTER HELP LINE- Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களும் தங்கள் பெயர்களைச் சேர்க்கலாம்.