தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 13ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.