Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நடவடிக்கை – மற்றொரு எஸ்.ஐ, தலைக் காவலர் கைது – சிபிசிஐடி அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில்  தொடர்புடைய மற்றொரு எஸ்.ஐ, தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை  காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நிலையில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நள்ளிரவு முதல் நடத்திய சோதனையில் வழக்கில் தொடர்புடைய மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிஜிபி திரிபாதி, ஏடிஜிபி ஜெயந்த் முரளி  வழிகாட்டல் படி இரவு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் தற்போது உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு காவலர் தலைமறைவாக இருக்கின்றார். அவரையும் தேடும் பணியில் சிபிசிஐடி போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |