Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நல்ல வேளை பெருசா எதும் நடக்கல… பெங்களூரில் மீட்கபட்ட சிறுமி… கைது செய்த காவல்துறையினர்…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டிட தொழிலாளி சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டியில் சிதம்பரம் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் தங்கி கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வசித்து  வரும் 17 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிதம்பரம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் தங்களின் மகள் காணாததை அறிந்த சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின்போது சிதம்பரம் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பெங்களூர் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன் பின் பெங்களூரில் உள்ள அந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிதம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |