சென்னை திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியா நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி கட்டிடத்தில் மேல் தளத்தில் கல்லூரியும், கீழ்தளத்தில் விடுதியும் இருக்கிறது. இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி(19) என்ற மாணவி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த மாணவி கடந்த 30ஆம் தேதி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி திருவேற்காடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு விசாரணை அதிகாரி பகிர்ந்து உள்ள தகவல் மாணவியின் தற்கொலைக்கான விவரத்தை அளித்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவி சுமதி ஐந்து மாதமாக விடுதி கட்டணத்தை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதை கட்ட சொல்லி விடுதி நிர்வாகம் மாணவிக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றது. இதனால் மாணவி தனது அப்பாவிற்கு ஃபோன் செய்து விடுது கட்டணம் செலுத்த பணம் அனுப்பி வையுங்கள் என கேட்டு இருக்கின்றார். அப்போது இனி நீ விடுதியில் தங்க வேண்டாம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வா என கூறியுள்ளார்.
ஆனால் பாக்கி கட்டணத்தை செலுத்தாமல் விடுதியில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கண்டிப்புடன் இருந்துள்ளது. இதனால் மாணவி மேலும் உளைச்சலுக்கு ஆனானார். அதன் பின் மாணவியின் அப்பா மகளின் google பே எண்ணிற்கு 8000 ரூபாய் அனுப்பி இருக்கின்றார். அதை வைத்து மாணவி கல்வி கட்டணத்தை செலுத்தி இருக்கின்றார். ஆனால் விடுதி கட்டணம் செலுத்துவது பாக்கி இருந்ததால் அதையும் கட்ட சொல்லி நிர்வாகம் அழுத்தம் கொடுத்து இருக்கின்றது. அதன் பின் மீண்டும் மகளின் எண்ணிற்கு 30ஆம் தேதி அன்று 4000 ரூபாய் அனுப்பி இருக்கின்றார். அதை கட்டியதும் மாலை வீட்டிற்கு வந்து விடுவேன் என மாணவி தந்தையிடம் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். ஆனால் அதன்பின் சுமதி வீட்டிற்கு செல்லவில்லை இதனால் சந்தேகம் அடைந்த தந்தை சுமதிக்கு போன் செய்துள்ளார் .ஆனால் மாணவி போனை எடுக்கவில்லை இதன் பின் மாணவியின் தோழிக்கு போன் செய்த பின் தான் மகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது பற்றி கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவியுடன் விடுதியில் தங்கி இருந்த தோழிகளிடம் சிபிசிஐடி குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.