நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளிம்பு நிலையில்- அடிப்படை உரிமைகள் இன்றி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த 19.03.2022 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதினேன்.அதில் விரைவில் குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் தகுதி அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் முயற்சிகளின் விளைவாக கழகத்தின் முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெறுகின்ற இந்த வேளையில் இந்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது
சமூக நீதி வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில் நிகழ்த்தியுள்ள சாதனை இது!
நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியின தகுதி மட்டுமின்றி எனது தலைமையிலான அரசு அமைந்து பிறகு அவர்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நானே அவர்கள் வசிக்கும் பூஞ்சேரி கிராமத்திற்கு சென்று அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மட்டும் இன்றி குடும்ப அட்டை போன்ற அடிப்படை உரிமைகளை அளித்து அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கான உத்தரவாத திட்டத்தை துவக்கி வைத்து 4.53 கோடி ரூபாய்க்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். நரிக்குறவர் இன மக்களின் வாழ்வினை ஒளிமயமாக்க எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்..
நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன்.
விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! pic.twitter.com/qqc8WoprSL
— M.K.Stalin (@mkstalin) September 14, 2022