நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘நிழல்’ என்ற மலையாள திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது அட்டகாசமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்.ஜே.பாலாஜி ,ஊர்வசி, அஜய் கோஸ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர் . தற்போது நடிகை நயன்தாரா ‘நிழல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அப்பு பட்டாத்திரி இயக்கும் இந்த திரைப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் எர்ணாகுளத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது . இந்நிலையில் நிழல் திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாத காலத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மகிழ்ச்சியில் உள்ள படக்குழுவிற்கு ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.