Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ம முதல்வருக்கு…. இதெல்லாம் கைவந்த கலை…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, கர்நாடகாவுடனான நதிநீர் பிரச்சினை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் திமுக ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு. இப்போது ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என்பது கைவந்த கலையாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பெட்ரோலிய பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலைப்பாடானது தற்போது அவர் முதல்வராக வந்த பிறகு மாறிவிட்டது. அதாவது ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது.

இது தேர்தலுக்கு பிந்தைய திமுகவின் நிலைப்பாடு. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக இதெல்லாம் திமுகவினர் கூறியுள்ளனர் என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே முதல்வர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு பொது மக்களின் சுமையை குறைக்கும் வண்ணம் ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |