Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம கண்ணே பட்டுரும்…. அழகான குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

புன்னகை அரசியான சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை சினேகா. இவருக்கு புன்னகை அரசி என்ற பெயரும் உண்டு. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சிறந்த நடிகையாக விளங்கியவர். நடிகை சினேகா பிரபல நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டு மகன் மற்றும் மகளுக்கு தாய் ஆகியுள்ளார்.

இதனையடுத்து திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பை தொடர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் சினேகா. இவர் கடைசியாக பட்டாசு என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் புன்னகை அரசியான நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்தப் போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |