சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட கலை விழாவுக்காக 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது .
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் சென்னையில் 7 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளுக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்களை கொண்டு மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.