நம்பியூர் பகுதியில் பூட்டியிருந்த அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூரில் இருக்கும் காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் வேணுகோபால் என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் இருக்கும் தனது மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்தபடி இருந்தது.
மேலும் அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்திருக்கின்றது. இதேபோல் இவர் வீட்டின் அருகிலேயே வசித்து வருபவர் இந்திராணி. இவர் வெளியூருக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்த பொழுது இவரின் வீட்டு கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடைத்திருக்கின்றது. நகை, பணம் இல்லாததால் இருவரின் வீட்டிலிருந்தும் எதுவும் கொள்ளை போகவில்லை. கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்திருக்கின்றனர். இதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.