Categories
உலக செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பு…. பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடி வெற்றி….!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றுள்ளார். இவர் 2020ல் கொரோனா  நோய் தொற்றின் முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டன் பிரதமரின் தனது இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் எழுந்ததால் அந்த தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.  இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார்.

அவரது இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியுள்ளனர். இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து லண்டனின் மெட்ரோபொலிட்டன் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த இரு பிரச்சனைகளை முன் வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே பதவி விலக வலியுறுத்தி வருவதால் பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பெரும்பான்மை எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனை அடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக வாக்களிக்கும் பட்சத்தில் வாக்கெடுப்பில் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை எனவும் புதிய பிரதமர் தேர்வு நிச்சயம் உண்டு என இங்கிலாந்து ஊடங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளார்.

Categories

Tech |