மேற்கு வங்காளத்தில் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் பின்னடைவை கண்டுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சி அமைத்த திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் இந்த முறை போட்டியிட்டார். நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை கண்டுள்ளார். மேற்கு வங்க தேர்தல் முடிவுகளில் பாஜக மற்றும் திரிணாமுல் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது நந்திகிராமில் மம்தா பானர்ஜி பின்னடைவு.