Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பேருந்தில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சேர்ந்தகோட்டை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லெனின்குமார் அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லெனின்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மோதியுள்ளது.

இந்த விபத்தில் லெனின்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மற்ற இரு சிறுவர்களும் படுகாயமடைந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தகவலறிந்து சென்ற முதுகுளத்தூர் காவல்துறையினர் லெனின்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |