Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. மாணவனை இழுத்து சென்ற கடல் அலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மாணவனை ராட்சத அலை அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணக்குடியில் அஜன் கிளாமிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜன் கிளாமிஸ் தனது நண்பர்களுடன் கடலில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அஜன் கிளாமிஸை சுருட்டிக்கொண்டு உள்ளே இழுத்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அஜன் கிளாமிஸை காப்பாற்ற முடியவில்லை . அதன்பின் அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள் என்று பலத்த சத்தம் எழுப்பியுள்ளனர்.

அந்த சத்தம் கேட்டு வந்த மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று தூண்டில் வளைவு பகுதியில் வலையை விரித்து தீவிரமாக தேடியுள்ளனர். பின்னர் 2 மணி நேர தேடலுக்குப் பிறகு மீனவர்கள் வலையில் அஜன் கிளாமிஸின் சடலம் சிக்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜன் கிளாமிஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திடீரென எழுந்த ராட்சத அலையில் மாணவன் சிக்கி பலியான சம்பவம் மணக்குடி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |