ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வி. ஆண்டி குப்பம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐடிஐ படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விஷ்வா தனது நண்பர்களான ரிஷிதரன்(18), பாலமுருகன்(19), நரேந்திரன்(18), பாலாஜி, அபிஷேக் ஆகியோருடன் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் விஷ்வாவும், பாலாஜியும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பாலாஜியை காப்பாற்று விட்டனர். ஆனால் விஷ்வாவை மீட்க முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஷ்வாவின் உடலை மீட்டனர். பின்னர் வாலிபரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.