தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் மேட்டு தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் குடிநீர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகனான சாரதி(16) என்பவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாரதி தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.