தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் புழல் ஏரி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 3-வது மகன் அந்தோணி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தோணி தனது நண்பர்களுடன் சேர்ந்து புழல் ஏரியில் குளித்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தோணி தண்ணீரில் மூழ்கினான்
இதனை பார்த்ததும் அவரது நண்பர்கள் அலறி சத்தம் போட்டனர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.