Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்…. தொடங்கி வைத்த முக்கிய பிரமுகர்கள்….!!!!

பொதுமக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேப்பூதகுடி கிராமத்தில் பெரியகுளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மேப்பூதகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு வலை, சேலை, கச்சா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி விரால், நெத்திலி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து உள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியாக எடுத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |