நூலகம் அறிவுசார் மையம் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம் அறிவுசார் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, துணைத்தலைவர் கான் முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, பேரூராட்சி உறுப்பினர் கண்ணன், சரவணன், ராஜேஸ்வரி சேகர், சாந்தி சோமசுந்தரம், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் விராமணி மாணிக்கம், நகர செயலாளர் கார்த்திகேயன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சண்முகம், சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு காளிமுத்து, பேச்சாளர் ஷாஜகான், கட்டிட ஒப்பந்ததாரர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்துள்ளார்.