Categories
மாவட்ட செய்திகள்

“நடைபெறவுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு”…. நடைபெற்ற விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்…!!!!!

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத்தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கின்றது. இத்தேர்விற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 6965 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்காக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்வு மையத்தில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தேர்விற்காக போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 1000 பேர் பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

Categories

Tech |