Categories
உலக செய்திகள்

“நடு ரோட்டில் சென்ற வாகனங்களை தீ வைத்த பயங்கரவாதிகள்”… 8 பேர் பலி.. பெரும் சோகம்…!!!!!!

சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் தீ வைத்ததில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். போலீஸர் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய பகுதியில் உள்ள ஹிரான் மாகாணத்தில் பெலட்வேய்ன் மற்றும் மாக்சாஸ் நகரங்களுக்கு இடையே உள்ள சாலையில் வாகனங்கள் பல சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த அல் ஷபாப் பயங்கரவாதிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி தீ வைத்துள்ளனர். இப்படி கார் லாரி உள்ளிட்ட எட்டு வாகனங்களை தீ வைத்து விட்டு பயங்கரவாதிகள் தப்பி ஓடி உள்ளனர். இதில் எட்டு வாகனங்களும் முழுமையாக தீயில் கருகி சாம்பல் ஆனது. இந்த கோர சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் மேற்கொண்ட பெண்கள் சிறுவர்கள் உட்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் அவர்களின் சிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |