Categories
தேசிய செய்திகள்

நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்….. விமானியின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து…. டிஜிசிஏ அதிரடி உத்தரவு….!!!

மும்பையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் விமான நிலையத்திற்கு கடந்த மே மாதம் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமான தரையிறங்கும் போது பெரிய அளவில் குலுங்கியது. இருப்பினும் விமானி அதனை கட்டுப்படுத்தினார். அதன் பிறகு விமான சீராக நின்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் தலைக்கு மேலே வைத்திருந்த உடைமைகளை அடங்கிய பைகள் அவர்கள் மீது விழுந்தது. இதனால் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட விமான குழு ஊழியர்களை விமான போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் பட்டியலிட்டது.

அந்த விமான பராமரிப்பு பொறியாளர், முறையான விசாரணைக்கு முன் விமானத்தை துர்காபூரில் இருந்து கொல்கத்தா செல்ல அனுமதித்தார் என்பதால் அவரை விமான போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் நீக்கியது. அதனைத் தொடர்ந்து டிஜிசிஏ நடத்திய விசாரணையில், அவசர காலத்தில் தானாக விமானத்தை கட்டுப்படுத்தும் ‘ஆட்டோமேட்டிக் பைலட்’ துண்டிக்கப்பட்டதால் பல நிமிடங்களுக்கு விமானத்தை விமானிகள் தான் கைமுறையாக கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இதனால் விமான இறங்கும்போது பலமுறை பலமாக குலுங்கியது. இது குறித்து விசாரணை நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தை இயக்கிய விமானின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |