Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் இதயதுல்லா என்பவர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கார் தீப்பிடிக்க  தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இதயதுல்லா உடனடியாக காரில் இருந்து இறங்கி ஓடி விட்டார். இதுகுறித்து  பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |