Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் அங்கபிரதட்சணம் செய்த நித்தியானந்தா…… எதற்காக தெரியுமா?…… வெளியான தகவல்…..!!!

கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. அதன் பிறகு மழையின் தீவிரம் குறைந்ததையடுத்து சாலைகளில் தேங்கி இருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. மழை வெள்ளத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சாலையை சீரமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உடுப்பியில் சாலையை சீரமைக்க கோரி நித்தியானந்தா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தி உள்ளார்.

அதாவது காவி உடை அணிந்து கொண்டு சாலையில் தேங்காய் உடைத்து பூஜை செய்த அவர் குண்டு குழியுமாக உள்ள சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார். இது குறித்து சமூக ஆர்வலர் நித்தியானந்தா கூறியது, மழை வெள்ளத்திற்கு பிறகு சாலைகள் படுமோசமாக மாறிவிட்டது. அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு இவர் நூதன முறையில் போராட்டம் நடத்தி பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |