தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஆக வலம் வருபவர் நிக்கிகல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. அதேநாளில் நிக்கிகல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார். சஞ்சனா 2 ஆண்டுகளுக்கு முன் ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதில் சஞ்சனா தமிழில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவர் கடந்த 2020 ஆம் வருடம் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்து பிறகு பெயில் பெற்று வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.