சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த “வாய்தா” பட நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா(29) சென்ற 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் “நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ விருப்பம் இன்றி தற்கொலை செய்துகொள்கிறேன்.
என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை தீபாவின் காணாமல்போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது. நடிகை தீபா தற்கொலை செய்து கொண்ட போது கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடம் இருந்து ஐபோனை காவல்துறையினர் மீட்டனர். மொத்தமாக நடிகை தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், ஒரு டேப் போன்றவை மீட்கப்பட்டுள்ளது.