பிரபல சீரியல் நடிகரான அர்ணவ்மற்றும் சீரியல் நடிகை திவ்யா இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் இணையத்தில் உலா வந்தது. திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாவதாக நடிகர் அர்ணவை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அண்மையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா , அர்னாவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகாரை முன் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் மாறி மாறி தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை வெளியிட்ட நிலையில் திவ்யா தற்போது பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனது இரண்டாவது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இவர் மீது ஏற்கனவே பெண் ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். மலேசியாவில் பெண் ஒருவரிடம் நெருங்கி பழகி ஏமாற்றியுள்ளார். தற்போது நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். போலி சரியாக விசாரித்தால் அவர் முத்திரையை கிழிக்க தயார் என்று திவ்யா கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.