Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நடந்து சென்ற பெண்” துண்டாக பறிபோன சங்கிலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துவாரகா நகரில் ஆரோக்கியவிக்டர்ராஜ்-தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம்மாள் அதே பகுதியில் அமைந்துள்ள கடைக்கு சென்று விட்டு   வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் தங்கம்மாள்  கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

இதனை பார்த்த தங்கம்மாள் சங்கிலியை இறுக்கமாக பிடித்துள்ளார். ஆனால் அந்த  மர்ம நபர்  1 1/2 மதிப்பிலான தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தங்கம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |