சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக முத்துகுமார் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் முத்துகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அரியலூர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.