Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவர்…. காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

தொழிலாளி தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் சித்ராதேவி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராதேவியின் நடத்தை மீது சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் சித்ரா தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் சதீஷ்குமார் சித்ரா தேவியை கட்டையால் அடித்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ரா தேவியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |