திருப்பூரில் உள்ள நஞ்சராயன் ஏரிக்கு அருகில் உள்ள பகுதிகள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் 17-வது சரணாலயம் ஆகும். இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ரூ.7.5 கோடி தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
அதனை தொடர்ந்து ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 126 ஹெக்டர் பரப்பளவு நிலம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல் கோடியக்கரை, வேட்டங்குடி உள்ளிட்ட 16 சரணாலயங்கள் உள்ளது.