Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நகையை திருடி விட்டான்”…. தொழிலாளிக்கு சூடு வைத்து சித்திரவதை…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பூண்டி அருகே முள்ளங்காடு மலைவாழ் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாய கூலி தொழிலாளியான  இவரை கடந்த 23ஆம் தேதி மாலை செம்மேடு முட்டத்துவயல் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கோபால்(47), நரசிபுரம் ஆத்தூரை சேர்ந்த நஞ்சப்பன்(54) போன்றோர் வேலைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து கோபால், நஞ்சப்பன் மற்றும் பட்டியார் கோவிலை சேர்ந்த சின்ன ரத்தினம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அவர்களின் நகையை சந்திரன் திருடி விட்டதாக கூறி தகாத வார்த்தையால் பிளாஸ்டிக் குழாயால்  அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர்.

ஆனால் அவர் நகை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள்  அதனை ஏற்றுக் கொள்ளாமல் இரும்பு கம்பியை சூடாக்கி சந்திரனை கையால் பிடிக்க சொல்லி சூடு வைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கின்றனர். இதனையடுத்து சந்திரன் தன்னை அடித்து சித்திரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சந்திரனை அடித்து சித்திரவதை செய்த கோபால், நஞ்சப்பன்,சின்ன ரத்னம்  ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |