Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகையும், பணமும் போச்சு…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பொந்தம்புளி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு சுதா ராணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க அட்டிகை, தோடு, குண்டுமணி ஆகிய நகைகளையும், 55 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

இதனையடுத்து ராஜேந்திரனின் வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ராஜேந்திரன் நகை மற்றும் பணம் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து உடனடியாக கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |