நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து பகிரலாம் எனவும் ட்விட்டரில் அதிக தகவல்களை பகிர் பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நகரங்களின் வாழ்க்கை வசதி மற்றும் நகர நிர்வாக செயல்பாடு குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது.
நகர வாழ்க்கை தரம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றைக்கு 70 சதவீதமும் நகரத்தில் வசிக்கும் பொது மக்களின் கருத்துக்கு 30 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தாங்கள் வாழும் நகரங்கள் குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் பிட்டர் பக்கத்தில் உள்ள இது தொடர்பான பதிவை அதிகம் பகிர்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.