பெண் ஒருவர் தன் தோழியின் கணவர் மீது காதல் கொண்டு ஒரே வீட்டில் வசித்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளம் பெண்ணான Piddu Kaur (31). இவர் கடந்த 2009 ஆம் வருடத்தில் ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக Piddu கணவரை விவாகரத்து செய்துள்ளார். அதன்பின்பு சில நாட்கள் கழித்து தன் பள்ளிக்கால தோழர்களான Speetie Sing மற்றும் அவரது மனைவி Sunny ஆகியோரை சந்தித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து Speetie தம்பதியினர் தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு அழைத்துள்ளனர். அச்சமயத்தில் Speetieக்கும் Pidduக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒன்றிணைந்து உள்ளனர். அதன் பின்புதான் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. அதாவது Speetie, Sunny மற்றும் Piddu ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் Speetie, Sunny ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் Speetie, Piddu தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் இவர்கள் மூவருமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கத்திற்கு மாறாக வாழ்க்கையை நடத்தி வருவதால் இவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இவர்களுடன் பேசுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் மூவரும் ஒருவரிடம் ஒருவர் ஒளிவு மறைவில்லாமல் வாழ்கிறார்களாம். அதனால் எங்களுக்குள் பொறாமை, போன்ற பிரச்சனைகள் வருவதில் என்று கூறியுள்ளனர்.