Categories
மாநில செய்திகள்

தோண்ட தோண்ட வெளிவரும் அதிசயங்கள்…… மீண்டும் சுடுமண் உறைக்கிணறு கண்டெடுப்பா?….. வெளியான தகவல்…..!!!

தமிழகத் தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் கீழடி, அகரம், கொந்தகையில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் கீழடியில் ஒரு உறை கிணறும், அகரத்தில் 4 உறைக்கிணறுகளும் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அகரம் தளத்தில் சரிந்த நிலையில் இரண்டு அடுக்குகள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளது.

இதனையடுத்து 8 ஆம் கட்ட அகழ்வாய்வில் முதன்முறையாக 9 அடுங்கள் வரை வெளியிடப்பட்டுள்ளது. உறைக்கிணறுகள் 80 செ.மீ. விட்டமும், 20 செ.மீ. உயரமும் கொண்டவையாக உள்ளது. மேலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருவதால் உறைக்கிணற்றின் உயரம் இன்னும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கீழடியில் நடந்த 6 ஆம் கட்ட அகழ்வாயில் தமிழகத்திலேயே மிகப்பெரிய உறைக்கிணறு கண்டறியப்பட்டது. மேலும் இந்த மாதத்துடன் அகழ்வாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளதையடுத்து அகரத்தில் உறைக்கிணற்றின் உயரம் அதிகரிப்பதால் பணிகள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |