காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட செல்வமணி என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் கரும்பை சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கலியன் செல்வமணியை தோட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வமணி கட்டையால் கலியனை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் செல்வமணியை பிடித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்