கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொந்தாளம் மண் திட்டு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவதர்ஷினி(18) என்ற மகளும், சரவணன் என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் தேவதர்ஷினி கரூரில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்ற தேவதர்ஷினி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தோட்டத்துக்கு கிணற்றில் தேவதர்ஷினி சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் மாணவியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவதர்ஷினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.