Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற நண்பர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராஜ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மகாலிங்கமும், செல்வராஜும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் செல்வராஜ் உருட்டுக்கட்டையால் மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |