Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்”…. தேனி மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்….!!!!!

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சீதா லட்சுமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2022-23-ம் வருடம் தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, கொத்தமல்லி, முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,371.55 பிரிமியம் தொகை செலுத்த அடுத்த வருடம் பிப்ரவரி 28-ந்தேதி கடைசி நாளாகும். கத்தரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,185.60 பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 31-ந்தேதி கடைசி நாளாகும்.

முட்டைக்கோஸ் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,155.95 பிரிமியம் தொகை, தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியம் ரூ.871.90 செலுத்த ஜனவரி 31-ந்தேதி கடைசி நாளாகும். கொத்தமல்லி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.637.25 செலுத்த ஜனவரி 18-ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த பயிர்களை சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, பதிவு கட்டணம், அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்டவற்றுடன் தங்கள் பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள், வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்டவற்றின் மூலமாக பயிர் காப்பீடு செய்யலாம் என கூறப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |