விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் தகுதியின் அடிப்படையில் 90 சதவீதம் வரை வங்கி கடன் பெறும் வசதி இருக்கின்றது. இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாக இருந்தால் 10% முதல் 15 % வரை பங்களிப்பு தொகையும் இதர நிறுவனங்களுக்கு 25% வரையும் பங்களிப்பு தொகையாக இருக்கின்றது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.